ரயில்வே டிராக்கில் போட்டோ ஷூட்.. நூலிழையில் தப்பிய 5 உயிர்கள் - கனவிலும் மறக்க முடியாத சம்பவம்
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா அருகே தண்டவாளத்தில் போட்டோ ஷூட் நடத்திய புதுமண ஜோடி உள்பட 5 பேர் நூலிழையில் உயிர் தப்பினர். மதுகரிபுரா பகுதியைச் சேர்ந்த புதுமண ஜோடி, ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில் மிகவும் பிஸியாக போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே காவலர் ஒருவர், உடனே சப்தம் எழுப்பி ஒதுங்கி நிற்குமாறு அறிவுறுத்தினார். அவர்கள் ஒதுங்கி நின்ற அடுத்த நொடியே தண்டவாளத்தை ரயில் கடந்ததால், 5 பேரும் நூலிழையில் உயிர்தப்பினர்.
Next Story