``இனி எப்போதும் அப்படி கேட்க மாட்டேன்'' - பகீர் கிளப்பிய வைரமுத்து

Update: 2024-09-26 11:11 GMT

கவிஞர் வைரமுத்து நடிகர் ரஜினிகாந்த் பற்றி ஒரு சுவையான தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்... கொடி பறக்குது படப்பிடிப்பின் போது, தான் ரஜினியை சந்தித்ததாகவும், அப்போது "இளையராஜாவுக்கும் பாரதிராஜாவுக்கும் ஒரு படம் நடித்துக் கொடுத்து விட்டேன். அடுத்து உங்களுக்குத் தான்" என உளப்பூர்வமாக ரஜினி கேட்ட நிலையில், அவரது நட்புறவை எண்ணி நெகிழ்ந்த வைரமுத்து படம் தயாரிக்க வேண்டும் ன்ற எண்ணம் எழுந்தால் கண்டிப்பாக அணுகுவதாக தழுதழுத்தபடி தெரிவித்தாராம். "நண்பர்களாய் இருப்பது புனிதமானது...வியாபாரிகளாய் இருப்பது கணிதமானது...புனிதத்தைக் கணிதத்தால் கெடவிடமாட்டேன்" என்றும் "அதனால், இப்போது மட்டுமல்ல

எப்போதும் கேட்க மாட்டேன்" எனவும் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் வைரமுத்து...

Tags:    

மேலும் செய்திகள்