நிவின் பாலி மீது பாலியல் புகார் - உண்மையை உடைத்து நடிகை வீடியோ

Update: 2024-09-07 02:20 GMT

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நடிகர் நிவின்பாலிக்கு மலையாள திரையுலகில் ஆதரவு பெருகி வருகிறது.

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி, கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி தன்னை துபாயில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டினார். அதன் அடிப்படையில் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இளம்பெண் சொல்லும் காலக்கட்டத்தில் நிவின் பாலி கொச்சியில் இருந்த தடயங்கள் விசாரணையில் சிக்கியது. அதேவேளை இளம் பெண் சொல்லும் நாளில் நிவின் பாலி கொச்சி படப்படிப்பில் தன்னோடு இருந்ததாக நடிகர் வினித் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். இப்போது நடிகை பார்வதி கிருஷ்ணா, கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற படப்பிடிப்பில் நிவின் பாலி உடன் தானும் இருந்ததாக, அப்போது எடுத்த வீடியோ காட்சியையும் வெளியிட்டுள்ளார். பார்வதி கிருஷ்ணா வெளியிட்ட வீடியோ காட்சியில், பதிவு செய்த நாளாக 2023 டிசம்பர் 14 என்பது பதிவாகியுள்ளது. நிவின் பாலி குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க பலரும் ஆதரவு தெரிவிக்கும் வேளையில், உண்மை தன்மையை அறிய சிறப்பு விசாரணை குழுவும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க கேரள முதல்வர், கலாச்சாரத்துறை அமைச்சர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆதாரத்தோடு மனு ஒன்றை நடிகர் நிவின் பாலி அளித்துள்ளார். குறிப்பிட்ட நாளன்று தான் வெளிநாட்டில் இல்லை என்பதற்கான பாஸ்போர்ட் நகலை இணைத்து தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனவும் தனக்கு எதிரான சதி திட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்