முன்னாள் சிறைவாசிகளுக்கு நிதியுதவி வழங்கிய முதல்வர்

Update: 2023-05-05 09:18 GMT

தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பில் முன்விடுதலை செய்யப்பட்ட 660 சிறைவாசிகளுக்கு, 3.30 கோடி மதிப்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 660 சிறைவாசிகளுக்கு உதவித்தொகை வழங்குவதின் அடையாளமாக, 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி, தற்போது 660 நபர்களுக்கு உதவி தொகையாக 50 ஆயிரம் ரூபாய் வழங்குவது போல், அடுத்த ஆண்டு 1000 பேருக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.முன்னாள் சிறைவாசிகளுக்கு நிதியுதவி வழங்கிய முதல்வர்

Tags:    

மேலும் செய்திகள்