சாலையில் சிதறிய மது பாட்டில்கள்.. அள்ள முடியாமல் அள்ளி சென்ற மது பிரியர்கள்

Update: 2023-05-02 06:38 GMT

கிருஷ்ணகிரி அருகே மேம்பால சுவரில் மோதி பீர் லோடு ஏற்றி வந்த கவிழ்ந்த நிலையில், உடையாத பீர் பாட்டில்களை குடிமகன்கள் அள்ளிச் சென்றதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. கோவாவில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த லாரி ஒன்று, பந்தாரப்பள்ளி மேம்பால சுவற்றில் மோதி சர்வீஸ் ரோட்டில் கவிழ்ந்த‌து. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர்தப்பினார். அதே நேரத்தில், பீர் பாட்டில்கள் விழுந்து உடைந்து பீர் ஆறாக ஓடியது. தகவலறிந்து சென்ற, போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள், பொக்லைன் எந்திரம் மூலம் பாட்டில்களை அப்புறப்படுத்தினர். அப்போது அங்கு கூடிய குடிமகன்கள், போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் முன்பே, உடையாத பீர் பாட்டில்களை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்