Traffic -ல் சிக்கிக் கொண்ட கார்... கான்வாயை விட்டு இறங்கி சாலையில் நடந்து சென்ற அமைச்சர்

Update: 2023-06-16 12:41 GMT

மேகாலயாவின் சோனாபூரில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அசாம் அமைச்சர் ஒருவர் அதில் சிக்கிக் கொண்டார். ஒவ்வொரு ஆண்டும், மேகாலயா மாநிலம் கிழக்கு ஜெயின்டியா மலைகளில் கடும் மழைப்பொழிவால் மண்சரிவுகள் ஏற்படுவது வழக்கம். அவ்வகையில், சோனாபூரில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அவ்வழியே சென்ற அசாம் அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா போக்குவரத்து பாதிப்பில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அவர் தனது கான்வாயை விட்டு இறங்கி சாலையின் குறுக்கே நடந்து சென்றார். மண் சரிவால் சாலை பாதிக்கப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அமைச்சர் பாதுகாப்பாக கடந்து செல்ல அதிகாரிகள் உதவும் காட்சி வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்