கடலில் மிதந்து வந்த பாட்டில்கள் மது என நினைத்து குடித்த 5 பேர் பலி..

Update: 2024-07-01 06:11 GMT

கடலில் மிதந்த பாட்டில்களில் மதுபானம் இருந்ததாக நினைத்து அதை அருந்திய 5 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அம்பாந்தோட்டை மாவட்டம் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 6 பேர் கடலில் மிதந்து வந்த பாட்டில்களைக் கண்டனர்... அந்த பாட்டில்களில் மதுபானம் நினைத்து அவர்கள் அருந்திய நிலையில், உடல்நலன் குன்றி நடுக்கடலிலேயே 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்குப் போராடி வருகிறார்... சில பாட்டில்களை வேறு சில படகுகளில் வந்த மீனவர்களுக்கும் வழங்கியுள்ள நிலையில் அவர்கள் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை. நடுக்கடலில் கப்பல் உள்ளதால் மீட்க 2 தினங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது... மீனவர்களை உடனடியாகக் சேர்க்கக் கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். உறவினர்கள் கண்ணீர் விட்டுக் கதறித் துடித்தனர்... இதனால் கொழும்பு - கதிர்காமம் வீதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்