முழு பலத்தை காட்டும் `இஸ்ரேல்' - காலியாகும் காசாவின் முக்கிய திசை..

Update: 2023-10-15 08:04 GMT

காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றிய நிலையில், அந்த பகுதியில் பயங்கர தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வாரமாக மோதல் நீடித்து வரும் நிலையில், காசாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் மீண்டும் வான் வழியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் அங்கு ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு முன், அங்கிருந்து வெளியேறுமாறு பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் வலியுறுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ள பயணக் கைதிகளை மீட்கும் முயற்சியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், காசாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் பொதுமக்களை தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு அறிவுறுத்திய இஸ்ரேல் ராணுவம், வடக்குப் பகுதியில் தரை வழியாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்காக, இஸ்ரேல் முழுவதும் அந்நாட்டு அரசு படைகளை குவித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்