போர் களத்தில் இருந்து சென்னை திரும்பிய 17 பேர் - வரவேற்ற திமுக எம்.பி

Update: 2023-10-18 10:51 GMT

இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் மூலம் 5வது கட்டமாக வந்த விமானத்தில் தமிழர்கள் அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து 17 பேர் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில், தி.மு.க. எம்.பி. கலாநிதி வீராசாமி, அயலக தமிழர் நலத் துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலாநிதி வீராசாமி, இஸ்ரேலில் உள்ளவர்களை தமிழ்நாடு அழைத்து வருவதற்கும், விமான நிலையத்திலிருந்து இல்லம் திரும்புவதற்கும் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்