64 பேர் உயிரை பறித்து கோர முகம் காட்டிய புயல்... 30 லட்சம் பேரின் நிலை கவலைக்கிடம்? | Cyclone

Update: 2024-09-30 03:43 GMT

அமெரிக்காவின் தென்கிழக்கு மாகணங்களில், ஹெலேன் புயலால் ஏற்பட்ட வெள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது. வடக்கு கரோலினா, ஜியார்ஜியா, ஃபுளோரிடா, விர்ஜீனியா, டென்னிசி, கென்டகி, ஓகியோ மற்றும் இண்டியானா மாகாணங்களில் 30 லட்சம் மக்கள் மின் இணைப்பு இல்லாமல் அவதியடைந்துள்ளனர். வடக்கு கரோலினாவில் உள்ள ஆஸ்வில்லே பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹெலேன் புயலால் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்