உக்ரைனில் உயிரிழந்த கர்நாடக மாணவரின் உடல் பெங்களூரு வந்தடைந்தது

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடல் பெங்களூரு வந்தடைந்தது. உக்ரைன் போரில் கடந்த 1 ஆம் தேதி கர்நாடாகவைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார்.

Update: 2022-03-21 02:52 GMT
உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடல் பெங்களூரு வந்தடைந்தது. உக்ரைன் போரில் கடந்த 1 ஆம் தேதி கர்நாடாகவைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்தார். இதனையடுத்து, பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு விமானம் மூலம் பெங்களூரு வந்த மாணவர் நவீனின் உடல் அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விமான நிலையம் வந்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மாணவர் நவீன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்