பச்சை பச்சையாக திட்டி வாயை பொத்தி வயிற்றில் குத்து.. 2 பெரிய கட்சி நிர்வாகிகளுக்குள் மோதல்

Update: 2024-07-23 06:12 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவருக்கும், பாஜக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஜல் ஜீவன் திட்ட பயனாளிகளிடம் பணம் வாங்குவதாக கூறி, பாஜக நிர்வாகி அழகர்சாமி மற்றும் ராஜகுரு சார்பில், ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு, ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான ராஜேந்திரன் மற்றும் கவுன்சிலர் சீனவாசன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் தரப்பு நியாயங்களை கூறினர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்