பறிபோன 52 உயிர்கள்.. தமிழகத்தை அதிரவைக்கும் டேட்டா | Virudhunagar

Update: 2024-10-10 14:20 GMT

தமிழகத்தில் நடப்பாண்டு 27 பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நடைபெற்று இருப்பதாகவும், அதில் 52 பேர் உயிரிழந்ததாகவும், சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

பட்டாசு தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில், பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிழச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆனந்த்,தமிழகத்தில் நடப்பாண்டு 17 பட்டாசு ஆலை வெடி விபத்துகள் நடைபெற்று இருப்பதாகவும், அதில் 52 பேர் உயிரிழந்ததாக கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும்

42 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்