மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து சிறுமி பலி..தோளில் போட்டு கதறி அழுத உறவினர்கள் - உலுக்கும் காட்சி

Update: 2024-09-30 09:10 GMT

விருதுநகர் இருக்கன்குடி கிராமத்தில் மின்சாரம் தாக்கி 5 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... மணி கார்த்திக் - சம்யுக்தா தம்பதியின் 5 வயது குழந்தை நந்தினி தெருவில் உள்ள மின்கம்பத்தைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.குழந்தை நந்தினியின் உடலைப் பார்த்து பெற்றோரும் உறவினர்களூம் கண்ணீர் விட்டுக் கதறியழுதது சோகத்தில் ஆழ்த்தியது.தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டு மின்சாரம் கசிவதாக மின்சார துறை ஊழியர்களுக்குப் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் குழந்தை உயிர் பரிதாபமாக பறிபோனதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்