விக்கிரவாண்டியில் பயங்கர மோதல்..."திமுககாரங்க காசு கொடுத்தாங்களாமா?"

Update: 2024-07-02 02:24 GMT

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், திமுக, பாமகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.காணை அருகே உள்ள சாணிமேடு கிராமத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பொதுமக்களை, திமுகவினர் தங்களது சாமியானா பந்தலில் அமரவைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், திமுக, பாமக கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து, காவல்துறையினர் இருதரப்பினரையும் பிரித்துவிட்டனர். திமுக பந்தலில் அமர்ந்திருந்த பொதுமக்களில் சிலர், தாங்கள் எந்த பணமும் வாங்கவில்லை என்று தெரிவித்தது, குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்