சைலண்டாக அரசியல் களத்தையே அலறவிட்ட விஜய்.. அத்தனை பெரிய பெரிய கட்சிகளும் திகைப்பு

Update: 2024-10-24 02:19 GMT

சைலண்டாக அரசியல் களத்தையே அலறவிட்ட விஜய்.. அத்தனை பெரிய பெரிய கட்சிகளும் திகைப்பு


தமிழக வெற்றிக்கழக முதல் மாநாட்டு திடலில், காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது அரசியல் பார்வையாளர்களை உற்று நோக்க வைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ந் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பணிகள் முழுவீச்சில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாநாட்டு மேடையின் முகப்பில் வெற்றி கொள்கைத் திருவிழா என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு அதன் மேல் இரண்டு பிளிரும் யானைகள் இரண்டு கால்களை தூக்கி துதிக்கையை தூக்கி நிற்கும் படங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மேலும், மாநாட்டு திடலில் 70 அடி உயரத்தில் பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அடுத்ததாக சட்டமேதை அம்பேத்கர் ஆகியோரது கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது அரசியல் பார்வையாளர்களை உற்று நோக்க வைத்துள்ளது. மாநாட்டு திடல் முழுவதும் இரவு நேரத்தில் மின்னொளியால் மின்னும் ஆயிரக்கணக்கான எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்