"மகனை காப்பாத்துங்க.. கையெடுத்து கும்பிட்ட தாய்" அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்! பரிதமாக இறந்த சிறுவன்

Update: 2024-10-13 15:55 GMT

திருவள்ளூர் அடுத்த விடையூர் பகுதியைச் சேர்ந்த ஹரிபாபு என்பவரது 14 வயது மகன் தீபக்குமார் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சனிக்கிழமை இரவு தனது துணிகளுக்கு இஸ்திரி போட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, இஸ்திரி பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தீபக்குமார் அலறி துடிதுடித்து மயங்கி விழுந்தான். இதனை பார்த்து பதறிபோன குடும்பத்தார், உடனடியாக விடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். எனினும், உடனடியாக சிகிச்சை அளிக்காததால் சிறுவன் தீபக்குமார் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் கதறினர்.

Tags:    

மேலும் செய்திகள்