``அது மட்டும் நடந்தால் யாருடைய தயவும் தேவை இல்லை'' - திருமாவை மறைமுக அட்டாக் செய்த திமுக தரப்பு..?

Update: 2024-09-23 06:00 GMT

சென்னையை அடுத்த ஆலந்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர். தோழமை கட்சிகள் எல்லாம் எப்படி செயல்படுகின்றன என்பதை பார்த்து கொண்டு இருப்பீர்கள் என்றும் அதை பற்றி தாம் பேச முடியாது என்றும் கூறினார். திமுக இளைஞரணியில் அதிக உறுப்பினர்களை சேர்த்தால் யாருடைய தயவும் தேவை இருக்காது என்று அவர் கூறினார். வரும் 28 ந் தேதி நடக்கும் கூட்டத்தை எதிர்கட்சிகள் பிரமிக்கும் வகையில் நடத்தி காட்ட வேண்டும் என்றும் அமைச்சர் தாமோ அன்பரசன் கேட்டு கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்