மொத்த ஊரையும் கதறவிட்ட காட்டுயானை..செய்வதறியாது கதறிய ஊர் மக்கள்..பரபரப்பு காட்சி

Update: 2024-10-12 10:08 GMT
  • கோவை தொண்டாமுத்தூர் பகுதிகளில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்... சமீபத்தில் உறங்கிக் கொண்டு இருந்த ஒருவரை மிதித்துக் கொன்ற சம்பவம் அரங்கேறி கிராம மக்களை பீதியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் நள்ளிரவு வந்த ஒற்றை யானை நரசிபுரம் பகுதியில் வழக்கம் போல வாழை தோட்டத்தை சேதப்படுத்தியும், 5 லட்சம் மதிப்பிலான வெங்காய பட்டறை சேதப்படுத்தியும் ஊருக்குள் உலா வந்துள்ளது. இதுகுறித்து கோரிக்கை வைக்க விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளை சந்திக்க சென்ற பொழுது, அலுவலகத்தில் கடைநிலை ஊழியர்கள் தான் இருந்ததாகத் தெரிகிறது... அதிகாரிகள் இல்லாததால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
Tags:    

மேலும் செய்திகள்