திடீரென இறங்கிய 100-க்கும் மேற்பட்டோர் - மடக்கி பிடித்த ஊர்மக்கள் - பகீர் பின்னணி

Update: 2024-07-04 15:42 GMT

துண்டுக்காடு என்ற இடத்தில் வெங்கடாசலம் மற்றும் தங்கமுத்து சகோதரர்களுக்கு சொந்தமான 20 கோடி ரூபாய் மதிப்பிலான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்திற்கு சொந்தம் கோரி அவர்களது சகோதரிகள் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கியதாகக் கூறிய சிலர், சுமார் 100-க்கும் மேற்பட்டவர்களை ஆயுதங்களுடன் அழைத்து வந்து ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். இதைத் தொடர்ந்து, நிலத்தின் உரிமையாளர்கள் ஊர்மக்கள் உதவியுடன் சேர்ந்து அவர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் 127 பேர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், தப்பியோடியவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்