இயற்கை உபாதை கழிக்க சென்ற பாட்டியிடம் செய்யக்கூடாத அசிங்கத்தை செய்த இளைஞர்

Update: 2024-06-24 10:12 GMT

சிவகாசியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 70 வயது மூதாட்டியை, 25 வயது இளைஞர் பாலியல் ரீதியாக அத்துமீறி கொன்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், வீட்டருகேயுள்ள முள் காட்டிற்குள் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற நிலையில், காட்டுக்குள் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், பெண்கள் இயற்கை உபாதை கழிக்கச் செல்லும் இடத்தில் அதே பகுதியை சேர்ந்த காசி மாயன் என்பவர் அடிக்கடி மறைந்திருப்பதாகவும், இந்த நிலையில் இயற்கை உபாதை கழிக்க வந்த மூதாட்டியிடம் காசி மாயனே பாலியல் ரீதியாக அத்துமீறி அவரை கயிறால் கழுத்தை இறுக்கி கொன்றதாக கூறப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. மேலும், இளைஞர் காசி மாயன் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவர, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்