சிங்கப்பூரில் திடீரென உச்சம் தொட்ட கொரோனா - கோவையில் நடந்த மாற்றம்

Update: 2024-05-23 13:15 GMT

சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக வெளி வரும் தகவல்களை அடுத்து கோவை விமான நிலையத்தில் சார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்று தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் பிரத்தியேக தகவல் வந்தால் கடைபிடிக்கப்படும் எனவும், நோய் தொற்று பரவல் குறித்து தற்போது பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை என்றும் கோவை சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்