செந்தில்பாலாஜி வழக்கு.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Update: 2024-08-13 07:18 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஊழல் வழக்கில், சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கக்கோரிய மனு மீது பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறிய விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் ஊழல் வழக்குகளை ஒராண்டுக்குள் நிறைவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மேலும், விசாரணை நடைபெறுவதில் தமிழ்நாடு அரசு செய்து வரும் தாமதம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, அறிக்கை அளிக்கவும், அவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்