சசிகலா அக்கவுண்டிற்கு மாற்றப்பட்ட ரூ.50 கோடி? - திடீர் வேகமெடுக்கும் கொடநாடு கேஸ்

Update: 2024-09-29 09:57 GMT

கொடநாடு வழக்கில் HDFC வங்கியின் புதுச்சேரி கிளை மேலாளர் அக்டோபர் 3-ந்தேதி நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 200 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள சிபிசிஐடி போலீசார், 2017ஆம் ஆண்டு HDFC வங்கி கிளையில் இருந்து சசிகலாவிற்கு 50 கோடி ரூபாய் வரை மாற்றப்பட்டதாக வெளியான தகவல் குறித்து சம்பந்தப்பட்ட மேலாளரிடம் விசாரிக்க உள்ளனர். இதே போல போயஸ் கார்டனில் சிறு வயது முதலே பூசாரியாக இருந்த விக்னேஷ்க்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்