நாடே உற்றுநோக்கும் 2 மணி.. நெருப்பாய் வெடிக்கப்போகும் ராகுல் - மக்களவையில் சம்பவம் இருக்கு

Update: 2024-07-29 06:38 GMT

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாத‌த்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதற்காக தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 மணிக்கு பேச உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ராகுல் காந்தி இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், காங்கிரஸ் எம்பிக்களின் அழுத்த‌த்தால், காலையில் முடிவை அறிவிப்பார் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். மக்களவையில் பேசும்போது, பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு உள்ளிட்டவை குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்