வேலியில் சிக்கிய 2 வயது மான்... போதையில் மானைக்கொன்று சமைத்து சாப்பிட்ட 6 பேர்

Update: 2024-06-29 14:43 GMT

கொடைக்கானல் வாழைகிரியில் வனத்துறையினர் செல்வக்குமார் என்பவர் பணிபுரியும் தனியார் தோட்டத்தில் சோதனை செய்த போது, மானின் தலை, கால், குடல், தோல் உள்ளிட்ட உறுப்புகள் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது... செல்வக்குமார், கன்னிவாடியை சேர்ந்த கண்ணன், ராஜேஷ், காமக்கப்பட்டியை சேர்ந்த அஜித், பண்ணைக்காடை சேர்ந்த சிவராமன், சித்தரேவு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன், மன்னார் குடியை சேர்ந்த பிரவீன் ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்த போது உண்மை வெளிவந்தது... வேலியில் சிக்கிய 2 வயது மானை மதுபோதையில் கொன்று உண்டது தெரிய வந்துள்ளது... டிராக்டர், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது... 6 பேர் மீதும் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்... அவர்கள் மான்கறி சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்