அசந்த நேரத்தில் அடித்து தூக்கிய கார்.. பரிதாபமாக பறிபோன மூதாட்டியின் உயிர்.. சிசிடிவி காட்சி

Update: 2024-07-08 15:16 GMT

மூதாட்டி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் பலி

சமூக வலைதளங்களில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள

கூனியூர் பகுதியை சேர்ந்த கோமு என்ற மூதாட்டி,

நேற்று மாலை தனது கால்நடைகள் மேய்ச்சலுக்காக

சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது

அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென

கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்று

கொண்டிருந்த கோமு மீது மோதியதில், தூக்கி வீசப்பட்டு

சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம்

அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சேரன்மகாதேவி

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி

வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்