நீட் பேப்பர் லீக்.. CBI வசம் சிக்கினார் நாடே தேடிய முக்கிய புள்ளி | Neet Exam

Update: 2024-07-04 08:54 GMT

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் அமன் சிங்கை சி.பி.ஐ கைது செய்துள்ளது.நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை செய்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹாஸாரிபாக் மாவட்டத்தில், நீட் தேர்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவரும், தனியார் பள்ளியின் முதல்வருமான ஏஸானுல் ஹக், அதே பள்ளியின் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகிய இருவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த 28-ம் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் அமன் சிங்கை, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்