கோவையில் மரண வீடாக மாறிய திருமண வீடு.. துரோகிகளாக மாறி முதுகில் குத்திய 4 நண்பர்கள்

Update: 2024-09-10 05:17 GMT

கோவை, உக்கடம் பகுதியை சேர்ந்தவர் கோகுல். இவரது அண்ணன் ரங்கராஜுக்கு திருமணம் நடைபெற இருந்தநிலையில், தனது நண்பர்களுடன் அமர்ந்து கோகுல் மது அருந்தி உள்ளார். ஏற்கனவே, அவர்களுக்குள் பணி செய்யும் இடத்தில் அதிக ஒலி எழுப்பி பாடல் வைப்பதில் தகராறு இருந்துள்ளது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு, மதுபோதையில் இருந்த கோகுலை நண்பர்கள் 4 பேர் சேர்ந்து கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். தொடர்ந்து, போலீசார் நாகராஜ், பிரவீன்குமார், உள்பட நண்பர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அண்ணனுக்கு திருமணம் நடைபெற இருந்தநிலையில், தம்பி குத்தி கொலை செய்யப்பட்டதால் திருமண வீடு மரண வீடாக மாறியது.

Tags:    

மேலும் செய்திகள்