மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் தலையிடவிரும்பவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பிரசாரம் செய்ததாக மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்த செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, திமுக பிரமுகர், பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இதனை பரிசீலனை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.