மாவட்ட கல்வி அலுவலகம் எதிரேயே மகாவிஷ்ணு நிகழ்ச்சி - "எனக்கு ஒன்னுமே தெரியாது"

Update: 2024-09-11 04:13 GMT

மாவட்ட கல்வி அலுவலகம் எதிரேயே மகாவிஷ்ணு நிகழ்ச்சி - "எனக்கு ஒன்னுமே தெரியாது" - தலைமை செயலாளர் கைக்கு போகும் ரிப்போர்ட்

மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் தொடர்பாக நீண்ட நேரம் விசாரணை நடத்திய பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட கல்வி அலுவலரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.

மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் முடிவுக்கு வராத நிலையில், பள்ளிக்கு எதிரிலேயே உள்ள தென்சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதியிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரிடமும் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதியிடம், அலுவலகத்திற்கு எதிரே உள்ள பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது.... இது தெரியாதா?... என்று கண்ணப்பன் கேள்வி எழுப்ப, தனக்கு எதுவும் தெரியாது என்று சரஸ்வதி பதில் அளித்திருக்கிறார். விசாரணை முடிவடைந்த நிலையில் தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்