மதுரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்... அந்த தப்ப செஞ்சவங்களே ஷாக் ஆகிடுவாங்க

Update: 2024-09-28 11:09 GMT

மதுரை காளவாசலை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், கடந்த 2002-ஆம் ஆண்டு வாங்கிய 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை, தனது தாயின் நினைவாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை, மர்மநபர் திருடிச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன், 5 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மதுரை முழுவதும் பைக்கின் புகைப்படத்துடன் நோட்டீஸ் ஒட்டியுள்ளார். அதில், திருடியவர் இருசக்கர வாகனத்தை திரும்பி கொடுத்தால், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் பணமும், தீபாவளிக்கு உடையும் வாங்கி தருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்