இறந்த தந்தைக்கு மீண்டும் உயிர்... பார்த்தவுடன் கண்ணீர் சிந்திய தாய்... மகன் திருமணத்தில் நெகிழ்ச்சி

Update: 2024-09-16 15:35 GMT

தனது தந்தையின் மெழுகுசிலை முன்பு மணமகன் ஒருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வலங்காகுளம் கிராமத்தை சேர்ந்த பின்னத்தேவர் என்பவர் கடந்த ஏப்ரலில் மரணமடைந்த நிலையில், அவரின் மகன் சிவராமனின் திருமணம் மதுரை செல்லூரில் இன்று நடைபெற்றது. தனது திருமணத்தில் தந்தை இருக்க வேண்டும் என எண்ணி, ஒன்றரை லட்சம் மதிப்பில் பின்னத்தேவரின் முழு உருவ

மெழுகு சிலையை தத்ரூபமாக உருவாக்கி, அதனை மேடையில் வைத்து அதனருகில் தாயார் ஜெயாவை நிறுத்தி, சிலையின் முன்பாக தாலிகட்டி திருமணம் செய்தார். பின்னர் தந்தையின் சிலை முன்பாக காலில் விழுந்து மணமக்கள் ஆசிர்வாதம் பெற்றனர். அப்போது மணமகன் சிவராமன் தனது அப்பாவின் சிலையை பார்த்து கண்ணீர் விட்டு அழுது சிலையின் கண்ணத்தில் முத்தமிட்டது திருமண விழாவிற்கு வந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது...

Tags:    

மேலும் செய்திகள்