மருமகளை மனைவியாக்க துடித்த மாமனார்.. அடங்கா வெறியால் மகனுக்கு எமனான கொடூரம்.. துப்பு கொடுத்த பைக்; அதிர்ந்த போலீசார்.. ஊரையே கதிகலங்க செய்த Ex.ஆர்மி

Update: 2024-10-09 13:23 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்துள்ள நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இராணுவத்தில் கட்டுக்கோப்பாக பணியாற்றிய நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஓய்வு பெற்று இருக்கிறார்.

சுறுசுறுப்பாக இருந்துவிட்டு ஓய்வு பெற்றதை விரும்பாத நாகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார் ஒட்டுநராகச் சிறிது காலம் பணியாற்றிய பின்னர் அதிலிருந்தும் ஓய்வு பெற்று இருக்கிறார்.

நாகராஜ் மகள் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய மருமகளை வேறு விதத்தில் பார்த்தது தான் இப்போது தீராத துயரை கொண்டு வந்திருக்கிறது..

நாகராஜின் தம்பி மகன் மணிகண்டன் திருமணமான நிலையில் குடும்பத்துடன் வசித்து வந்து இருக்கிறார். இவர்களது வீடு நாகராஜின் வீட்டின் அருகிலேயே இருந்ததால் மகன் என்ற உரிமையில் அடிக்கடி மணிகண்டன் வீட்டிற்கு வந்து சென்ற போது ஆரம்பித்திருக்கிறது விவகாரம்..

இதில் மணிகண்டனின் மனைவி வள்ளியம்மாளுடன் நாகராஜுக்குத் தகாத உறவு ஏற்பட்டு இருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த உறவு தொடர்ந்து வந்து இருக்கிறது. இதனால் சுமார் ரூ 17 லட்சம் செலவில் புதிய வீட்டையே வள்ளியம்மாளுக்கு கட்டிக் கொடுத்து இருக்கிறார்.

அரசல், புரசலாக இந்த விவகாரம் மணிகண்டன் காதுக்குச் செல்ல மனைவியை கண்டித்து இருக்கிறார். இதனால் நாகராஜ் உடனான உறவை முறித்து இருக்கிறார் வள்ளியம்மாள்.

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற நாகராஜ் இது குறித்து பழனி என்பவருடன் கலந்து ஆலோசிக்க பழனி, மணிகண்டனைத் தீர்த்து விடலாம் என முடிவு செய்து இருக்கின்றனர்.

இதற்கு சுமார் ஒரு லட்ச ரூபாயைப் பழனிக்கு போன் பே மூலம் அனுப்பி இருக்கிறார் நாகராஜ். தீட்டிய திட்டத்தின் படி காட்டுப் பகுதிக்கு மணிகண்டனை மது அருந்த அழைத்துச் சென்று குடிக்க வைத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் போதையில் மணிகண்டன் மயங்கி விழ அருகில் உள்ள கிணற்றில் தள்ளிக் கொலை செய்து இருக்கிறார்..

மணிகண்டன் மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் சிசிடிவி காட்சிகளைச் சோதிக்க அதில் மூவரும் சேர்ந்து செல்லும் காட்சிகள் பதிவானதை வைத்து போலீஸ் பாணியில் விசாரிக்க இருவரும் மேற்கண்ட சம்பவத்தை வாக்கு மூலமாக அளித்த பின்னர் இருவரையும் சிறையில் தள்ளி இருக்கின்றனர் போலீசார்.

Tags:    

மேலும் செய்திகள்