கொடைக்கானலில் அதிர்ச்சி சம்பவம் - சுற்றுலா பயணிகளுக்கு வைக்கப்படும் குறி

Update: 2024-06-30 13:55 GMT

மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் நள்ளிரவில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில்

கேரள பதிவு எண் கொண்ட காரில் 2 கிலோ கஞ்சா மற்றும் 30 பாக்கெட்களில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் பயணித்த மூவரிடம் விசாரித்ததில் அவர்கள் கொடைக்கானலில் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்க்கு மெத்தம்பெட்டமைன் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்