பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன மாட்டிறைச்சி... ரெய்டில் அதிர்ச்சி

Update: 2024-05-29 05:22 GMT

கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் கெட்டுப்போன மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதாக வந்த புகாரின்பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். வினோத் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. ஹோட்டல் சமையலறை, பிரிஜ் ஆகிய இடங்களில் வைக்கப்படிருந்த உணவு மாதிரியைக் கைப்பற்றி பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும், ஹோட்டல் உரிமையாளர் முகமது பக்ரிதீனுக்கு நோட்டீஸ் வழங்கியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்