டாக்டர் போட்ட ஒரு ஊசி! காலில் கொப்பளம் பொங்கி, அழுகிய கால்! அசால்ட்டாக சிகிச்சை கொடுத்த மருத்துவமனை

Update: 2024-10-19 17:18 GMT

ஒசூரைச் சேர்ந்த பரேக்கல் என்பவர் கால் வலிக்காக ஆயுஷ் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ஓசூர் திரும்பினார். அறுவை சிகிச்சைக்கு பிறகு நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் கால்வலி ஏற்பட்டதால், ஆயுஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு டாக்டர் வேடியப்பன் என்பவர் ஊசி செலுத்தி அனுப்பி வைத்ததாகவும், திடீரென அவருக்கு

காலில் கொப்பளம் பொங்கி, அழுகும் நிலையில், வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் மகன்

மாதேஷ் தெரிவித்துள்ளார். பரேக்கல்லின் கால் அகற்றப்பட்ட வேண்டும் என மருத்துவர்கள் கூறுவதாக தெரிவித்த மாதேஷ், தவறான சிகிச்சை அளித்த ஆயுஷ் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்