ரத்தம் சொட்ட சொட்ட மக்கள் மீது கொடூர தாக்குதல் - பதறவைக்கும் அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-10-07 02:38 GMT

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பொதுப்பாதையை தனிநபர் சொந்தம் கொண்டாடுவதை எதிர்த்து கேட்ட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கெளாப்பாறை பகுதிக்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தனக்கு சொந்தமான இடம் சாலை வரை நீள்வதாகவும், அதனால் சாலையை பயன்படுத்தக்கூடாது என சேகர் என்பவர் பொதுமக்களை மிரட்டியதாகவும், அதனை தட்டிக்கேட்ட பொதுமக்களை அடியாட்களை கொண்டு தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்