"ஆணா பெண்ணா.. 2 நொடியில் தெரியும்" ..லைவ்வாக பார்த்து மடக்கி பிடித்து வெளுத்து வாங்கிய பெண் அதிகாரி

Update: 2024-06-29 11:12 GMT

தர்மபுரியில் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறி வந்த கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது... நெக்குந்தியில் இந்த சட்டவிரோத செயல் நடந்து வருவதாக அறிந்த ஊரக நலத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி அதிரடியாகக் களத்தில் இறங்கி சோதனை மேற்கொண்டார்... அப்போது முத்தப்பா நகரில் லலிதா என்ற இடைத்தரகர் மூலம், முறையான கல்வியறிவில்லாத கள்ளக்குறிச்சி முருகேசன் என்பவர் நடமாடும் மருத்துவக் கருவியை வைத்துக் கொண்டு கருவில் இந்த வேலையை செய்து வந்தது தெரிய வந்தது. ஒருவருக்கு 13 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் உதவியுடன் அந்த கும்பலைச் சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர். முருகேசன் ஏற்கனவே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்