“பிள்ளைகள் தெருவில் உட்கார்ந்து தேர்வு எழுதும் நிலை.. “ - பெற்றோர்கள் வேதனை..

Update: 2024-09-23 12:56 GMT

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருக்கும் பள்ளி இடத்தை மீட்டு புதிய வகுப்பறை கட்டிக்கொடுக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப போவதில்லை என சிதம்பரம் பரங்கிபேட்டை பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பரங்கிப்பேட்டை கும்பத் பள்ளி தெருவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் 130 மாணவர்களுக்கு 3 வகுப்பறை மட்டுமே உள்ளது. இதனால் கல்வி கற்பதில் மாணவர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறும் பெற்றோர், புதிய வகுப்பறைக்கான கட்டுமான பணியை துவங்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெரிவித்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்