ஓடும் பஸ்ஸில் தவறி விழுந்த பெண்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள் | Rasipuram | Bus | Thanthitv

Update: 2024-07-04 06:02 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதி வளைவில் பேருந்து திரும்பிய போது, பேருந்தில் நின்றுகொண்டிருந்த சாரதா, எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். விரைந்து செயல்பட்ட பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர் ஆகியோர், பேருந்தை நிறுத்தி, சாலையில் படுகாயமடைந்து கிடந்த சாரதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்