சுற்றி வளைத்து கேள்வியால் துளைத்தெடுத்த மக்கள்.. தப்பித்து ஓடிய பிரபல தமிழ் நடிகர்

Update: 2024-10-20 10:24 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு சொகுசு காரில் வந்து, இலவச ஜூஸ் வழங்கிய நடிகர் பெஞ்சமின், பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் அங்கிருந்து தப்பிச் சென்றார். சத்திய மங்கலம் பேருந்து நிலையத்திற்கு நண்பர்களுடன் காரின் வந்த பெஞ்சமின், கிறிஸ்தவ மத வாசகங்கள் மற்றும் இயேசு படம் ஒட்டப்பட்ட பாட்டிலில் பொதுமக்களுக்கு இலவசமாக ஜூஸ் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அந்த ஜூஸ் பாட்டிலில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி எதுவும் இல்லை என தெரிகிறது. இதனையடுத்து, பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பினர். மேலும், மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி, அவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நண்பர்களுடன் நடிகர் பெஞ்சமின் காரில் ஏறி, அங்கிருந்து சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்