திருமணமான 2 மாதங்களில் கணவர் கண் முன்னே மனைவிக்கு நடந்த கோர சம்பவம்

Update: 2024-10-19 02:21 GMT

திருமணமான 2 மாதங்களில் கணவர் கண் முன்னே மனைவிக்கு நடந்த கோர சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தைச் சேர்ந்த நாகார்ஜுனாவுக்கும், சென்னை திருவேற்காடைச் சேர்ந்த விஸ்வ பிரியாவுக்கும் திருமணமாகி 2 மாதங்கள் தான் ஆகின்றன. பைக்கில் இத்தம்பதி பாதிரிவேட்டில் இருந்து கவரப்பேட்டை நோக்கிச் சென்ற போது, குருவராஜா கண்டிகை பகுதியில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விஸ்வ பிரியா தலையில் பலத்த காயமடைந்தார். ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விஸ்வபிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்புலன்சுக்காக காத்திருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்