ரத்தான இசைப்புயலின் இசை நிகழ்ச்சி... ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட பதிவு.. உடனே ரிப்ளை கொடுத்த முதல்வர்

Update: 2023-08-13 05:39 GMT

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், உலகத் தரம் வாய்ந்த கலைஞர் மாநாட்டு மையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், மழை, வெயில் என எதிலும் பாதிக்காத வகையில் பிரத்யேக அரங்கம் அமைக்க அரசு முன்வரும் என நம்புவதாக ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டிருந்தார். அவருக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 5 நட்சத்திர தங்கும் வசதி, உணவகங்கள், வாகன நிறுத்துமிடம் கூடிய கலைஞர் மாநாட்டு மையம் அமைக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார். அந்த அரங்கத்தில் பெரிய அளவிலான கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்த முடியும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்