தேசிய மகளிர் ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக வீராங்கனைகள் - விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர் நேரு

தேசிய மகளிர் ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக வீராங்கனைகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

Update: 2021-10-15 07:44 GMT
ஜார்க்கண்ட் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் வரும் 20 ஆம் தேதி தேசிய மகளிர் ஹாக்கி போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் தமிழகத்தில் இருந்து ஜூனியர் மற்றும் சீனியர் அணி என 36 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு, திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள ஹாக்கி மைதானத்தில் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு சீருடைகள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் கே.என்.நேரு வழங்கி ஊக்கப்படுத்தினார். அப்போது  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்