ஆசிய விளையாட்டுப் போட்டியில் அழுத இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

Update: 2023-09-26 05:50 GMT

ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற பின், இந்திய தேசிய கோடி ஏற்றப்பட்டபோது அழுதுவிட்டதாக, இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா கூறியுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில், இந்திய அணி தங்கம் வென்றது. பின்னர் பேசிய இந்திய அணி வீராங்கனை ஸ்மிருந்தி மந்தனா, தங்க பதக்கம் வழங்கப்படும்போது, இந்திய தேசிய கீதத்தோடு தேசிய கொடி ஏற்றப்பட்ட விதத்தை கண்டு கண்ணீர் வந்துவிட்டதாக கூறினார். அது சிறப்பான தருணம் எனக் குறிப்பிட்ட மந்தனா, இந்திய குழுவின் பதக்க எண்ணிக்கைக்கு பங்களிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்