2வது டெஸ்ட் - முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

Update: 2024-09-28 00:15 GMT

கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் மழை காரணமாக இந்தப் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேச அணியில் தொடக்க வீரர் சாகீர் ஹசனை, இந்திய பவுலர் ஆகாஷ் தீப், டக்-அவுட் ஆக்கினார். சற்று நேரம் தாக்குப்பிடித்த ஷட்மன் இஸ்லாம் 24 ரன்களும், கேப்டன் ஷான்டோ 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 35 ஓவர்களில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து இருந்தபோது கனமழை பெய்தது. இதனால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாமல், முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டது. 2ம் நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்