"அதிர்ச்சியா ஆச்சரியமா?" - திருச்சி சிவா பரபர பேச்சு

Update: 2023-09-19 07:38 GMT

நாடாளுமன்றத்தின் மூலமாக பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் எதிரொலிப்பதாக, திமுக எம்பி திருச்சி சிவா கூறினார்.

75 ஆண்டு கால நாடாளுமன்றத்தின் பயணம் மீதான விவாதத்தில் திமுக எம்பி திருச்சி சிவா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான அஜண்டா என்ன என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.

அதிர்ச்சி அல்லது ஆச்சரியம் ஏதோ ஒன்று காத்திருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தென்னகத்திலிருந்து ஜனநாயக நடைமுறை இருப்பதாக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை தவிர இந்த உலகில் அதிகம் நேசிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை என குறிப்பிட்ட திருச்சி சிவா, இந்த நாடாளுமன்றத்தின் மூலமாக பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நாம் எதிரொலிப்பதாக குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் திமுக நுழைந்தபோது மாநில கட்சிகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டதாக சிவா தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்