செந்தில் பாலாஜி விடுதலை.. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Update: 2024-09-26 16:00 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டதை தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை ஒட்டி கரூர் மாவட்டத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் திரண்ட திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதடுத்து திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டினர். அப்போது சாலையில் செல்வோருக்கு அவர்கள் இனிப்புகள் வழங்கினர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து பரமக்குடியில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் கருணாநிதி தலைமையில் வழக்கறிஞர்கள் வெடி வெடித்து கொண்டாடினர்.

குளித்தலை பகுதிகளில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை முன்னிட்டு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டினர்.

அப்போது அவர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆகியோரை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்