`தவறுக்கு மேல் தவறு' - அடுத்தடுத்து அடுக்கிய செல்வப்பெருந்தகை | Selvaperundhagai | NirmalaSitharaman

Update: 2024-09-15 02:18 GMT

அன்னபூர்ணா விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார். அன்னப்பூர்ணா விவகாரத்தில், பாஜக மற்றும் மத்திய நிதியமைச்சரை கண்டித்து கோவையில், காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, "பன் மாலை" அணிந்தும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு "க்ரீம் பன்" வழங்கியும், காங்கிரசார் கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்